For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயிலில் மூட்டைப் பூச்சிக் கடி! பயணிகள் கொந்தளிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் வந்த ரயிலில் மூட்டைப் பூச்சிக் கடி தாங்க முடியாமல் அப்பெட்டியில் பயணம் செய்தஅய்யப்ப பக்தர்கள் கொந்தளித்து நள்ளிரவில் ரயிலை நிறுத்தினர்.

திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூர் வரை செல்லும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை இரவுகிளம்பியது. புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் ரயில் சேலத்தை அடைந்தது. அங்கிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் ரயில்திடீரென நிறுத்தப்பட்டது.

என்னவென்று பார்த்தபோது, குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்த அய்யப்ப பக்தர்கள்தான் அவசர காலசங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தியது தெரியவந்தது. ரயில் டிரைவர், டி.டி.ஆர். உள்ளிட்ட அனைவரும் விரைந்து சென்றுஎன்னவென்று விசாரித்தனர்.

அப்போது அந்த பக்தர்கள் பயணம் செய்த பெட்டியில் மூட்டைப் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லை என்றும், தூங்கவேமுடியவில்லை என்றும் பக்தர்கள் கோபத்துடன் கூறினர். தங்களுக்கு வேறு பெட்டியில் இடம் கொடுக்குமாறும் அவர்கள்கோரினர். ஆனால் இந்த நேரத்தில் பெட்டிக்கு எங்கே போவது என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

ஆனால் பெட்டியை மாற்றாமல் ரயிலை எடுக்க விட மாட்டோம் என பக்தர்கள் தீர்மானமாக கூறவே அங்கு பரபரப்பு ஏற்பட்டது.நேரம் ஆக ஆக மற்ற பயணிகளும் கோபமடையத் தொடங்கினர்.

இதைத் தொடர்ந்து மூட்டைப் பூச்சி தொல்லை உள்ள பெட்டியில் பயணம் செய்தவர்களுக்கு அவர்களது பயணக் கட்டணத்தைமுழுமையாகத் திருப்பிக் கொடுக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அவர்களிடம் பணம் திருப்பித் தரப்பட்டது. அதன்பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.

பயணக் கட்டணத்தைத் திரும்பப் பெற்ற பயணிகள், ஆம்னி பேருந்தில் ஏறி பெங்களூர் சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X