பச்சை குத்தும் போட்டியில் தமிழக காங்கிரஸ்!
சென்னை:
தமிழக காங்கிரஸார் மத்தியில் நூதனமான போட்டி நிலவுகிறது. ஜி.கே.வாசன் பெயரை பச்சைக் குத்துவதில் அவரது ஆதரவாளர்கள்இறங்கியுள்ளனர். அவர்களுக்குப் போட்டியாக இளங்கோவன் ஆதரவாளர்கள் ராகுல் காந்தி பெயரை பச்சை குத்த ஆரம்பித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் அவ்வப்போது ஏதாவது சலசலப்பு ஏற்படுவது வழக்கம். பெரும்பாலும் கோஷ்டி மோதல்தான் இதற்கு முக்கியக்காரணமாக இருக்கும். சமீபத்தில் கூட எஸ்.ஆர்.பி. புண்ணியத்தால், சிலநாட்களாக வாசன் மற்றும் இளங்கோவன் ஆதரவாளர்கள் மாறிமாறி வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.இப்போது கோஷ்டிப் பூசல் வேரு ரூபத்தில் திரும்பி காங்கிரஸ்காரர்களிடையே புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜி.கே.வாசன்ஆதரவாளர்கள் சிலர் சமீபத்தில் தங்களது கைகளில் வாசனின் பெயரை பச்சை குத்திக் கொண்டனர்.
வாசனின் தீவிர ஆதரவாளரான ராயபுரம் மனோ (மூத்த தலைவர் எஸ்.ஜி.விநாயகமூர்த்தியின் வீட்டில் தாக்குதல் நடத்தியதாக கூறி கைதுசெய்யப்பட்டவர்) தலைமையில் வாசன் ஆதரவாளர்கள் பச்சை குத்திக் கொண்டனர். இதை ஒரு விழா போல மனோ ஏற்பாடுசெய்திருந்தார்.
இந்த நிலையில் வாசன் ஆதரவாளர்களுக்குப் பாட்டியாக இளங்கோவன் ஆதரவாளர்கள் ராகுல் காந்தியின் பெயரை தங்களது கைகளில்பச்சை குத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதற்கான நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனிலேயே இன்று காலை நடந்தது.
ராகுல் காந்தியின் பெயரை கைகளில் பச்சை குத்திக் கொள்ளும் வைபவத்தை இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணு பிரசாத் தொடங்கிவைத்தார். முதலில் அவர் தனது கையில் ராகுல்ஜி என்ற பெயரை பச்சை குத்திக் கொண்டார். அவரைத் தொடர்ந்து ஏராளமானோர்வரிசையாக நின்று பச்சை குத்திக் கொண்டனர்.
இன்று மட்டும் 200 பேருக்கு பச்சை குத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விஷ்ணு பிரசாத் பின்னர் தெரிவித்தார். தொடர்ந்து அவர்கூறுகையில், முன்பு எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது, கைகளில் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தார். அதேபாணியில் நாங்கள் இப்போது பச்சை குத்திக் கொள்கிறோம் என்றார்.
காங்கிரஸ்காரர்களின் கோஷ்டிப் பூசல் இப்படி பச்சை குத்திக் கொள்வது வரை வந்து விட்டது குறித்து ஆரம்ப கால காங்கிரஸ்கார்ரகள்பெரும் வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். கண்டிப்பாக யாராவது காங்கிரஸைக் காப்பாற்றியே ஆக வேண்டும்!