கோட்டை காவல் நிலையத்திற்கு வந்த சோதனை: பில் கட்டாததால் ஃபோன் துண்டிப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள காவல் நிலையம் தொலைபேசி கட்டணத்தை செலுத்தாத காரணத்தால், அதன்இணைப்பு துண்டிக்கப்பட்டது.
புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் காவல் நிலையம் உள்ளது. தலைமைச் செயலகம் சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் பணிகள்உள்ளிட்டவற்றை இந்த காவல் நிலையம்தான் கவனித்துக் கொள்கிறது.இக்காவல் நிலையத்தின் தொலைபேசி இணைப்பு கடந்த 5 நாட்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டது. இதனால் காவல் நிலையத்தின்பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. தொலைபேசி கட்டணம் செலுத்தப்படாத காரணத்தால்தான் இணைப்புதுண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்கள் தங்களிடம் உள்ள செல்போன்கள் மூலமாகத்தான் தகவல் தொடர்பை மேற்கொண்டுவருகின்றனர். உடனடியாக கட்டணத்தை செலுத்த மாநகர காவல்துறை அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅவர்கள் கோரியுள்ளனர். முதல்வரின் கவனத்திற்கும் இது கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications