மகளிர் சுய உதவிக் குழு: சட்டசபையில் சூடான விவாதம்!
சென்னை:
மகளிர் சுய உதவிக் குழுக்களை அறிமுகம் செய்தது யார் என்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று படு சூடான விவாதம் நடந்தது.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கிஅதற்கு ஊக்கம் கொடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று பேசினார். இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஜெயராமன் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதாதான் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஏற்படுத்தினார். இந்தக் குழுக்கள் சிறப்பாகசெயல்படுவதாக குடியரசுத் தலைவர் முதல் மாநில ஆளுநர் வரை அனைத்துத் தரப்பினரும் பாராட்டியுள்ளனர். இவர்களுக்கு கூட்டுறவுவங்கிகள் மூலம் தாராளமாக கடன் வழங்கப்படுகிறது. மாநில அரசும் ரூ. 10,000 மானியமாக வழங்குகிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை விட மாநில கூட்டுறவு வங்கிகள்தான் அதிக அளவில் கடன் வழங்குகின்றன. பல்வேறு சிறுதொழில்களை நடத்த இவர்களுக்கு கடன் வழங்கி தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது என்றார்.
அப்போது குறிப்பிட்ட திமுக உறுப்பினர் தண்டாரம்பட்டு வேலு, எந்த ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுவை நீங்கள் ஆரம்பித்தீர்கள்என்பதை சொல்ல முடியுமா என்று கேட்டார். அவருக்கு ஆதரவாக மேலும் சில திமுக எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பினர்.
ஆனால் அதற்கு அமைச்சர் ஜெயராமன் பதிலளிக்கவில்லை. மாறாக சபாநாயகரின் அனுமதியின்றி உறுப்பினர்கள் எழுந்து பேசுவதாககாளிமுத்துவை நோக்கிக் கூறினார். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
அப்போது திமுக உறுப்பினர் புகழேந்தி எழுந்து, கடந்த 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் மகளிர்சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கு மத்திய அரசுதான் அதிக அளவில் கடன் வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தைநிறைவேற்றும் பொறுப்பு மட்டுமே மாநில அரசுக்கு உள்ளது என்று கூறினார். இப்படியாக விவாதம் தொடர்ந்து நடந்தது.












Click it and Unblock the Notifications