For Daily Alerts
Just In
கூட்டணி குறித்து விஜயகாந்த்துடன் பேச்சு: பாஜக
சென்னை:
விஜயகாந்த் தொடங்கியுள்ள கட்சியை புரிந்து கொள்ள சில காலம் ஆகும். அதன் பிறகு கூட்டணி குறித்து அவருடன் பேசுவோம்என்று தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜயகாந்த் தனது கட்சியின் பெயரில் தேசியத்தைஇணைத்துள்ளார். இது பாராட்டத்தக்கது. பிரிவினைவாதம் தலை தூக்கி வரும் நேரத்தில் இந்தப் பெயரை அவர் வைத்துள்ளதுமிகவும் பொருத்தமானதாகும்.விஜயகாந்த்துக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் உண்டு. அதேபோல பாஜகவும் ஆன்மீகத்தை நம்பும் கட்சி. எனவே இருகட்சிகளும் இயற்கையாகவே பல பொருத்தங்களைக் கொண்டுள்ளன. எதிர்காலத்தில் இவை இரண்டும் இணைந்து செயல்படவாய்ப்புண்டு.
மனிதாபிமானம் மிக்க நல்ல தலைவரான விஜயகாந்த் எனது நண்பரும் கூட. அவரது தலைமைப் பண்பு, கட்சியின்செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள சில காலம் பிடிக்கும். அதற்குள் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள நல்லஅவகாசம் உள்ளது. அதன் பிறகு கூட்டணி குறித்துப் பேசுவோம் என்றார் ராதாகிருஷ்ணன்.
Story first published: Friday, September 23, 2005, 5:30 [IST]