ஏர் இந்தியா விமானி ஏற்படுத்திய பீதி!
சென்னை:
என்ஜின் கோளாறு என்று தவறாக நினைத்த ஏர் இந்தியா விமான விமானி, ஒரு என்ஜினுடன் சென்னை விமான நிலையத்தில்விமானத்தை தரையிறக்கினார். அதில் பயணம் செய்த 73 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர்.
சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் வழியாக சென்னைக்கு வரும் ஏர் இந்தியா விமானம் இன்று பிற்பகல் 1 மணியளவில்சென்னைக்கு வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு ஒரு கிலோமீட்டரே இருந்த நிலையில், திடீரெனவிமானியிடமிருந்து தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தகவல் வந்தது.அதில், விமான என்ஜினில் ஒன்று பழுதுபட்டுள்ளதாக சந்தேகப்படுவதாகவும், எனவே அனைத்து அவசர கால ஏற்பாடுகளையும்செய்யுமாறும் விமானி தெரிவித்தார். இதைத் தொடர்ந்த தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ், மீட்புப் பணிக்குத் தேவையானஅனைத்து ஏற்பாடுகளையும் விமான நிலைய அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செய்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமானம் ஒரு என்ஜினுடன் மிகவும் பத்திரமாக தரையிறங்கியது. அவசர காலங்களில்மேற்கொள்ளப்பட வேண்டிய முறைகளைக் கடைப்பிடித்து விமானி பத்திரமாக தரையிறக்கினார்.
இதைத் தொடர்ந்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் பொறியாளர்கள்சம்பந்தப்பட்ட என்ஜினைப் பரிசோதித்துப் பார்த்தபோது அது சரியாக இருந்தது தெரியவந்தது. விமானத்தில் உள்ள ஆபத்துகால கருவி தவறாக சமிக்ஞை கொடுத்ததால் விமானி பதட்டமடைந்து, தரைக்கட்டுப்பாட்டு மையத்தை உஷார்படுத்தியதுதெரியவந்தது.
இருப்பினும் ஒற்றை என்ஜினுடன் மிகவும் பத்திரமாக விமானத்தை தரையிறக்கிய விமானியை விமான நிலைய அதிகாரிகள்,பொறியாளர்கள், பயணிகள் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications