For Daily Alerts
Just In
புதுவை சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குமுறல்!
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகதியாகிகள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.காமராஜ் தேசிய புதுவை சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியிடப்பட்டது. புதுவையில்சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு முறையாக ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் புதுவையில்இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருப்பது வேதனையைத் தருகிறது.
அனைத்துத் தியாகிகளுக்கும் முறையாக ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். பலர் போலியான ஆவணங்களைக் காட்டிஓய்வூதியத் தொகையை பெற்று வருகின்றனர். அவற்றைக் கண்டுபிடித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை பிரதேசம், இந்தியாவுடன் இணைந்த தினமான நவம்பர் 1ம் தேதி பொது விடுமுறை நாளாக அரசு அறிவிக்க வேண்டும்என்றும் தியாகிகள் கோரியுள்ளனர்.
Comments
Story first published: Friday, September 23, 2005, 5:30 [IST]