நளினி மகளுக்கு விசா: 6 வாரங்களில் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறை வாசம் அனுபவித்து வரும் நளினியின் மகள், இந்தியாவுக்குவருவதற்காக விண்ணப்பித்துள்ள விசா மனுவை இன்னும் 6 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்தியஅரசின் குடியுரிமைத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நளினியும், அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முருகனுக்குத் தூக்குத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது. இவரது கருணை மனு குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது.நளினி, முருகன் தம்பதியினரின் மகள் மேஹ்ரா, தற்போது இலங்கையில் அவரது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். தற்போது 13வயதாகும் மேஹ்ரா, தனது தாய், தந்தையைக் காண விரும்பி இந்தியா வருவதற்காக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில்விசா கோரி விண்ணப்பித்தார்.
ஆனால் விண்ணப்பம் கொடுத்துஒரு வருடம் ஆகியும் அதுகுறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் முடிவு எதுவும்எடுக்காமல் உள்ளது.. இதைத் தொடர்ந்து தனது மகளுக்கு விசா அளிக்க உத்தரவிடுமாறு கோரி நளினி சார்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி முருகேசன், மேஹ்ராவின் விசா விண்ணப்பத்தை இன்னும் 6 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவுஎடுக்க வேண்டும் என்று குடியுரிமைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications