திமுகவுடன் கூட்டணி ஆட்சி! கூறுகிறார் ராஜ. கண்ணப்பன்
கள்ளக்குறிச்சி:
திமுகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவர் ராஜ.கண்ணப்பன் சூசகமாக கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நடந்த இக்கட்சியின் செயல்வீரர் கூட்டத்தில் ராஜ. கண்ணப்பன் பேசுகையில், மக்கள் தமிழ்தேசம் கட்சியால் தேர்தலில் என்ன சாதித்து விட முடியும், ஆட்சியைப் பிடித்து விட முடியுமா என்று சிலர்கேட்கின்றனர். ஆட்சியைப் பிடிப்பது நமது நோக்கம் அல்ல.நமது இனத்தைச் சேர்ந்த பலர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளாக உள்ளனர். ஆனால் முக்கியமான பதவிகள்அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. வெகு சாதாரண பதவிகளில்தான் அவர்கள் உள்ளனர்.
திமுகவுடன் கூட்டணியாக செயல்பட்டு, ஆட்சியில் அமரும்போது யாதவ இனத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை பெற்றுத் தர என்னால் முடியும். நம்மை ஆதரிக்கும் கட்சியுடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.
இதற்காகத்தான் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி வைத்துக் கொண்டுள்ளேன்.
திமுக தலைமையில் கூட்டணி ஆட்சி ஏற்படும்போது நமது கனவுகள் அனைத்தும் நனவாகும் என்றார்கண்ணப்பன்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முதலில் கூட்டணி ஆட்சி குறித்து ஆரம்பித்து வைத்தார். அவரைத் தொடர்ந்துகம்யூனிஸ்ட் தலைவர்களும் கூட்டணி ஆட்சி குறித்து வலியுறுத்தினார்கள்.
இப்போது கண்ணப்பன் வரை அனைவருமே கூட்டணி ஆட்சி பற்றி பேசத் தொடங்கியுள்ளார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications