For Daily Alerts
Just In
பிரபல மனநோய் மருத்துவர் வெங்கோப ராவ் மரணம்
மதுரை:
இந்தியாவின் முன்னணி மன நல மருத்துவரான டாக்டர் வெங்கோப ராவ் காலமானார்.
இந்திய மன நோயியலின் தந்தை என்று அழைக்கப்பட்ட ராவ், சிறுநீரகக் கோளாறு காரணமாக மதுரையில் ஒரு தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்றி அவர் இறந்தார். அவருக்கு வயது 78.மன நோயியல் ஆராய்ச்சிகளுக்காக தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல விருதுகளை வென்றுள்ள ராவ், 1954ல் சென்னைகீழ்பாக்கம் மன நல மருத்துவமனையில் தனது பணியைத் தொடங்கினார்.
400க்கும் மேற்பட்ட மன நல ஆராய்ச்சிக் கட்டுரைகள், 12 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
மன அழுத்தம், தற்கொலை சிந்தனைகள் ஆகிய நோய்களைத் தீர்ப்பதில் வல்லவராக விளங்கிய ராவ், பல்வேறு சமூகப்பணிகளும் ஆற்றி வந்தார்.
பல ஆண்டுகளாக மதுரையில் மருத்துவமனையை நடத்தி வந்தார். மறைந்த ராவுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
Comments
Story first published: Monday, September 26, 2005, 5:30 [IST]