ஓகேனக்கல்: கர்நாடகம் மீது ஜெ. குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஓகேனக்கல் அருவிப் பகுதியில் கர்நாடக அரசு தேவையற்ற சர்ச்சையில் ஈடுபட்டுள்ளது என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஓகேனக்கல் பகுதியில் கர்நாடக அதிகாரிகள் தேவையற்ற பிரச்சினையில் ஈடுபட்டு வருவது குறித்து சட்டசயிைல்இன்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது முதல்வர் ஜெயலலிதா அவை விதி எண் 110ன் கீழ் ஒரு அறிக்கையைப்படித்தார்.

அதன் விவரம்: தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல் அருவிப் பகுதியில் தமிழக எல்லைக்குள் உள்ள பகுதியில் அரசின்சார்பில் சில வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட பகுதி கர்நாடகஎல்லைக்குள் உள்ளதாக அம் மாநில அரசு பிரச்சினை எழுப்பியது.

இதைத் தொடர்ந்து கடந்த 16ம் தேதி தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தமிழக அதிகாரிகளும்,கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட கர்நாடக அதிகாரிகளும் சர்ச்சைக்குரிய இடத்தைப்பார்வையிட்டனர்.

இதைத் தொடர்ந்து 19ம் தேதியன்று இரு மாநில அலுவலர்களும், நில அளவையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில்,சர்ச்சைக்குரிய பகுதி தமிழக எல்லைக்குள்தான் உள்ளது என்பது உறுதியானது.

இந் நிலையில், சாம்ராஜ் நகர் ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் கடந்த 20ம்தேதியன்று அங்கு சென்று வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று தமிழக அதிகாரிகளைஎச்சரித்துள்ளனர்.

மேலும் 25ம் தேதியன்று கர்நாடகத்தைச் சேர்ந்த சில அமைப்புகள் வேண்டும் என்றே அங்கு சென்று கர்நாடகநிலையை நிலை நிறுத்த முயன்றனர். ஆனால் வரைபடங்கள், உபயோகத்தின் அடிப்படையில், சர்ச்சைக்குரிய பகுதிதமிழகத்திற்குச் சொந்தமானதுதான் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் கர்நாடக அரசு அங்கு தேவையற்றை பிரச்சினையை எழுப்ப முயலுவது ஏன் என்று புரியவில்லை. இதைஅம்மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+