சென்னை சாப்ட்வேர் வேலை வாய்ப்பு கண்காட்சி: திரண்டு வந்த 80,000 பேர்
சென்னை:
சென்னை வர்த்தக மையத்தில் நடந்த சாப்ட்வேர் வேலை வாய்ப்புக் கண்காட்சிக்கு கிட்டத்தட்ட 70,000பட்டதாரிகள் திரண்டு வந்தனர். அவர்களில் சுமார் 3,500 பேருக்கு ஆன் தி ஸ்பாட் வேலையும் கிடைத்து, கையில்வேலை நியமன உத்தரவுடன் திரும்பிச் சென்றனர்.
நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்துவேலைவாய்ப்பு கண்காட்சியை நடத்தின.இன்போசிஸ், விப்ரோ, போலாரிஸ், டிசிஎஸ், சிடிஎஸ் உள்ளிட்ட பல முன்னணி நறுவனங்கள் இக் கண்காட்சியில்கலந்து கொண்டன.
இக் கண்காட்சிக்கு பயோடேட்டா சகிதம் கிட்டத்தட்ட80,000 பேர் கலந்து கொண்டனர்.
இதனால் கண்காட்சி நடந்த வளாகத்துக்குள் மாணவ, மாணவிகள் வரிசையில் நுழைய பல மணி நேரம் பிடித்தது. மொத்தம்இரண்டு நாட்கள் நடந்த இக்கண்காட்சியில் கலந்து கொண்ட 3,500 பேருக்கு உடனடியாக வேலை நியமனஉத்தரவு வழங்கப்பட்டது.
மொத்தம் 20,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்பட்டது. இருப்பினும் முதலில் 3,500 பேருக்கு மட்டுமேகொடுக்கப்பட்டுள்ளது.
இதில் தேர்வு செய்யப்பட்ட மேலும் சில ஆயிரம் பேருக்கு இன்னும் சில வாரங்களில் நியமன உத்தரவுகள்வழங்கப்படும் எனத் தெரிகிறது.