ஆட்டோகிராப் மல்லிகா டீச்சர் கைது !
திண்டுக்கல்:
போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியை பணியில் சேர்ந்ததாக, ஆட்டோகிராப் படத்தில் மல்லிகா டீச்சர் என்றபாத்திரத்தில் நடித்த பெண் ராமதிலகத்தையும், செய்தியாளர்களை ஆபாசமாக திட்டியதாக அவரது கணவர்திரவியம், உறவினர் ஜெயந்தி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்தில் மல்லிகா டீச்சர் என்ற பாத்திரத்தில் நடித்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்தராமதிலகம். இவர் அரசு ஆதி திராவிடர் நலப் பள்ளியில் ஆசிரியையாகவே பணியாற்றி வந்தார்.
ஆனால் போலியான சான்றிதழ்களைக் கொடுத்து இப்பணியில் அவர் சேர்ந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துபணியிலிருந்து நீக்கினர்.
ராமதிலகம் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராமதிலகம், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். படத்தில் நடித்தவர்என்பதால், அவரைப் புகைப்படம் எடுக்கவும், செய்தி சேகரிக்கவும் ஏராளமான செய்தியாளர்கள்,புகைப்படக்காரர்கள் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.
நீதிபதி அறையிலிருந்து ராமதிலகம் வெளியே வந்தபோது அவரைப் புகைப்படம் எடுத்தனர். இதைப் பார்த்ததும்ஆத்திரமடைந்த ராமதிலகத்தின் கணவர் திரவியம், உறவினர் ஜெயந்தி ஆகியோர் புகைப்படக்காரர்களைதடுத்ததோடு, அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு படு ஆபாசமாக திட்டவும் தொடங்கினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த புகைப்படக்காரர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில்இருவரும் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து அவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.












Click it and Unblock the Notifications