குஷ்பு ஜாக்கிரதை: திருமாவளவன் சீறல்
சென்னை:
குஷ்புவுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் மிகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் திருமா பேசுகையில்,
குஷ்புவின் மூளையில் என்ன உள்ளதோ அதைத்தான் அவர் பேசியுள்ளார். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.அதுதான் குஷ்புவின் வாயிலிருந்தும் வந்துள்ளது.
பெண்களின் கற்பு குறித்து குஷ்பு கூறியுள்ள கருத்துக்கள் இளைஞர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வதாகும். அவர் சொல்வதுதமிழ் கட்டமைப்புக்கு பொருத்தமானது அல்ல. அவரது கருத்தைப் பின்பற்றினால் சமூகம் சீரழியும், இளைஞர்களும், பெண்களும்தவறான பாதைக்கு செல்ல வழி வகுக்கும்.
குஷ்பு ஜாக்கிரதை:
குடும்ப உறவுகளை சீரழிக்க வழி சொல்லியுள்ளார் குஷ்பு. அவர் கூறியுள்ள வழி தவறான வழிகாட்டுதல்.
ஒவ்வொரு வீட்டிலும் நாய்கள் ஜாக்கிரதை என்ற போர்டு மாட்டி வைத்திருப்பது போல, இனிமேல், குஷ்பு ஜாக்கிரதை என்றுஎழுதி வைக்க வேண்டும் என்று மிகவும் காட்டமாக கூறினார் திருமாவளவன்.
தங்கர்பச்சானை குஷ்பு விமர்சித்தபோதே அவருக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தவர் திருமாவளவன் என்பதுநினைவுகூறத்தக்கது.