பெருந்துறை அருகே பஸ்-லாரி மோதல்- 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில்6 பேர் பலியானார்கள். இதில் இரண்டு பேர் பெண்கள்.ஈரோட்டிலிருந்து திருப்பூருக்கு அரசு பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. பெருந்துறை அருகே பகலாயூர் என்றஇடத்தில் பேருந்து வந்தபோது, எதிரே வந்த லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இதில் லாரியின் டிரைவர், கிளீனர், பேருந்தில் பயணம் செய்த கணேசன், 55 வயது பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயேபலியாயினர்.
படுகாயமடைந்த 32 பேர் கோவை மற்றும் திருப்பூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 13வயது சிறுமி பலியானார்.












Click it and Unblock the Notifications