For Daily Alerts
Just In
சி.பா.ஆதித்தனார் வீடு நினைவிடமாகிறது
சென்னை:
முன்னாள் அமைச்சரும், சபாநாயகரும், தினந்தந்தி நாளிதழின் நிறுவனருமான சி.பா.ஆதித்தனார் வாழ்ந்த இல்லம் அரசுநினைவிடமாக மாற்றப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இன்று ஆதித்தனாரின் 101வது பிறந்த நாளாகும். இந் நிலையில் இன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா 110வது விதியின்கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார்.அப்போது, சி.பா. ஆதித்தனாரின் 101வது பிறந்தநாளையொட்டி அவரைக் கெளரவப்படுத்தும் விதமாக, அவர் வாழ்ந்தஇல்லத்தை நினைவிடமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளஆதித்தனாரின் இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும்.
அந்த நினைவிடத்தில் டிஜிட்டல் நூலகத்தை நிறுவ தனியார் அமைப்பு ஒன்று முன் வந்துள்ளது. அதற்கு தமிழக அரசு உதவும்என்றார்.
Comments
Story first published: Tuesday, September 27, 2005, 5:30 [IST]