நீதிமன்றத்தில் குஷ்பு கொடும்பாவி எரிப்பு: வழக்கு ஒத்திவைப்பு
சென்னை:
சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்திற்குள் நடிகை குஷ்புவின் கொடும்பாவியை வழக்கறிஞர்கள் எரித்ததால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே குஷ்புவைத் தண்டிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னைஎழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றம் வரும் அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டது.
தீபம் ஜெயக்குமார் என்ற பெண் வழக்கறிஞர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ்க் கன்னிப் பெண்கள்குறித்தும் அவதூறாகப் பேசியுள்ள குஷ்புவை, இந்திய தண்டனைச் சட்டம் 499, 500வது பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும்என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவைப் பரிசீலித்த நீதிபதி அதை ஏற்று வரும் அக்டோபர் 5ம்தேதி விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.
இந் நிலையில் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் கூடி குஷ்புவுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.அப்போது குஷ்புவின் உருவ பொம்மையையும் அவர்கள் தீ வைத்து எரித்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து உருவபொம்மை மீது தண்ணீர் ஊற்றி தீயைஅணைத்தனர்.
இதற்கிடையே நடிகை குஷ்புவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பல இடங்களில் நடந்தது. தனக்குவேண்டிய ஒரு டிவியின் வாயிலாக மட்டும் மன்னிப்பு கேட்டுள்ள குஷ்பு, பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றகோரிக்கை வலுத்து வருகிறது.