சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்
சென்னை:
சாலைப் பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக சட்டசபையிலிருந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் இன்று கூண்டோடுவெளியேற்றப்பட்டனர்.
தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர் பொன்முடி நேற்று பேசுகையில், சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரவேண்டும் என்று கோரினார். அப்போது பதில் அளித்த அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுகவினருக்கு லஞ்சம் கொடுத்துத்தான் சாலைப் பணியாளர்கள் வேலைகளில் சேர்ந்தனர் என்றார்.இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் நிரூபிக்க வேண்டும் என அவர்கள்கூறினர்.
அமைச்சரின் கருத்துக்களுக்குப் பதில் அளிக்க அவர்கள் சபாநாயகர் காளிமுத்துவிடம் அனுமதி கோரினர். ஆனால் அவர்அனுமதிக்க மறுத்ததால் திமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இந் நிலையில் இன்று காலை சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன், நிதியமைச்சர் பொன்னையன் எழுந்து, அமைச்சர்பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று தெரிவித்த புகார் தொடர்பாக மேலும் விளக்கம் அளிக்க விரும்புகிறார். அதற்கு சபாநாயகர்அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு காளித்துவும் அனுமதி அளித்தார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆதாரம் இல்லாத புகார்களை அமைச்சர் ஜெயராமன் கூறி வருகிறார்.அவர் விளக்கம் அளிக்க அனுமதி தரப்பட்டால், பதில் அளிக்க தங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்று அவர்கள் கோரினர்.ஆனால் காளிமுத்து அதை ஏற்கவில்லை.
இதையடுத்து சபாநாயகரின் இருக்கை முன் கூடிய திமுக உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். பதிலுக்குஅதிமுகவினரும் கத்த பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் மாறி மாறி கோஷமிட்டதால் அவையில் அமளி நிலவியது.
இந் நிலையில், திமுக உறுப்பினர்கள் அனைவரையும் கூண்டோடு வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு காளிமுத்துஉத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
சபாநாயகரின் போக்குக்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அனைவரும்வெளிநடப்புச் செய்தனர்.












Click it and Unblock the Notifications