ஜெயலட்சுமிக்கு பாதுகாப்பு: போலீஸார் கூண்டோடு மாற்றம்
மதுரை:
வாக்கி டாக்கி தொலைந்து போனதன் எதிரொலியாக ஜெயலட்சுமியின் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டிருந்த போலீஸார் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டு வேறு போலீஸார்நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை எல்லீஸ் நகரில் வசித்து வரும் ஜெயலட்சுமியின் வீட்டுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவின்பேரில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந் நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் போலீஸ்காரர் தன்னிடமிருந்த வாக்கி டாக்கியைத்தொலைத்து விட்டார்.
இதைத் தொடர்ந்து ஜெயலட்சுமி வீட்டில் போலீஸார் 2 நாட்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அவரது வீட்டுடாய்லெட்டில் ஆரம்பித்து எல்லா இடங்களிலும் போலீஸ் சோதனை நடந்தது.
வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் போலீசாரும் சோதனையில் ஈடுபட்டனர். செப்டிக் டாங்கில் கூட ஒருவரைஇறக்கிவிட்டு வாக்கி டாக்கியை தேடியது போலீஸ். ஆனால், வாக்கி டாக்கி கிடைக்கவில்லை.
இதையடுத்து ஜெயலட்சுமிக்கு பாதுகாப்பாக இருந்த 4 பெண் போலீஸார் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் ஜெயலட்சுமியின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 8 போலீஸாரும் கூண்டோடுமாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக வேறு போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications