எல்டிடிஈ தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்படும்: ஐரோப்பிய யூனியன் மிரட்டல்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப் போவதாக ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து வன்முறையையும் தீவிரவாதத்தையும் தனது ஆயுதமாக பயன்படுத்தி வருவது கடும்கண்டனத்துக்குரியது. குழந்தைகளை படையில் சேர்ப்பது, கதிர்காமர் உள்ளிட்டோரின் கொலை ஆகியவை ஏற்கத்தக்கதாகஇல்லை.
தனது அரசியல் இலக்குகளை அடைய தொடர்ந்து வன்முறையையே ஆயுதமாக புலிகள் இயக்கம் பயன்படுத்துமானால், அந்தஅமைப்பின் பெயர் தான் கெடும். மேலும் புலிகள் மீதான நம்பிக்கையும் நசிந்துவிடும்.
புலிகளின் இந்தப் போக்கால் அமைதி முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாகஅறிவிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
புலிகள் இயக்கத் தூதர்களை இனியும் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காது. மேலும் ஐரோப்பிய நாடுகளிலிபுலிகளின் இயக்கத்துக்கு தடை விதிக்கப்படும், அவர்களது ஆதரவாளர்களுக்கும் தடைகள் விதிக்கப்படும்.
குழந்தைகள் கடத்தப்பட்டு புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு வருவது பெரும் கவலையளிக்கிறது. எக்காரணம் கொண்டும்புலிகளின் இந்தச் செயலை ஏற்கவே முடியாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications