சேலத்தைக் கலக்கும் பயங்கர நேர்த்திக் கடன்!
சேலம்:
சேலம் கோவில் திருவிழாவில், ஆடுகளையும் சேவல்களையும் தலைகீழாகக் கட்டி அவை சாகும் வரை அப்படியேதொங்க விட்டு, பயங்கரமான முறையில் நேர்த்தி கடனை செலுத்தினர் பக்தர்கள்.
சேலம் அருகே உள்ளது குரல் நத்தம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் நூதனமான,அதேசமயம் கொடூரமான நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டு வருகிறது.1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்த அந்த விழாவின்போது, ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள்நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் பல பக்தர்கள் உயிருடன் உள்ள ஆடு, சேவல்களை கோவில் முன்பு தலைகீழாக கட்டினர்.
பின்னர் அவை சாகும் வரை அப்படியே விட்டனர். கோவிலின் முன்பு உள்ள பெரிய மரத்தின் கிளைகளில்ஆடுகளும் சேவல்களும் தலைகீழாக தொங்கியபடி, நீண்டநேரம் அபயக் குரல் எழுப்பியபடி மயங்கிச் சரிந்தன.
இவ்வாறு கட்டி விடப்படும் ஆடுகளும், சேவல்களும் கிட்டத்தட்ட 1 வாரம் வரை மரக் கிளைகளில் உயிருக்காகப்போராடிக் கொண்டிருக்குமாம்.
இவ்வாறு நேர்த்திக் கடனை செலுத்துவதன் மூலம், கடவுளின் அருள் தமக்குக் கிடைக்கும் என பக்தர்கள்நம்பிக்கை தெரிவித்தனர்.
இதேபோல இன்னொரு மரத்தில், குழந்தை வரம் வேண்டி பல பெண்கள் மரத் தொட்டில் கட்டி நேர்ந்துகொண்டார்கள்.












Click it and Unblock the Notifications