பொன்.மாணிக்கவேல் மீதான வழக்கு: உச்சநீதிமன்றம் தடை
டெல்லி:
செங்கை கிழக்கு மாவட்ட முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன். மாணிக்கவேல் மீதான வழக்குவிசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
செங்கை கிழக்கு மாவட்ட (இப்போது சென்னையுடன் இணைந்து விட்டது) காவல்துறைக் கண்காணிப்பாளராகபொன். மாணிக்கவேல் பணியாற்றியபோது, 3 விசாரணைக் கைதிகளை உத்தண்டி அருகே வைத்து போலீஸார்என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொன்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி கொல்லப்பட்ட இரண்டு பேரின் சகோதரியான பொம்மிஎன்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பொன். மாணிக்கவேல் தனிப்பட்ட பழியுணர்ச்சியின் காரணமாகவே 3 பேரையும் சுட்டுத் தள்ளி விட்டதாகபொம்மி குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே பொம்மி தரப்பைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்து,மனுவை வாபஸ் பெறச் சொல்லி சித்திரவதை செய்ததாகவும் புகார் கிளம்பியது.
இதனால் கடும் கோபமடைந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், டிஜிபி அலெக்சாண்டரை நீதிமன்றத்திற்குவரவழைத்து கடுமையாக கண்டித்தனர்.
இந் நிலையில் பொன். மாணிக்கவேல் மீதான புகாரை விசாரிக்குமாறு வடக்கு மண்டல ஐ.ஜி. ஜாங்கிட்டைஉயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. அவரும் விசாரணை நடத்தி வருகிறார்.
ஆனால், தான் எஸ்.பியாக இருந்தபோது ஜாங்கிட்டுக்கும், தனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும்,எனவே அவர் என் மீதான புகாரை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி பொன்.மாணிக்கவேல், உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
ஆனால் உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் மேல் முறையீடு செய்தார். மேலும், பொம்மி தொடர்ந்தவழக்குக்கும் இடைக்காலத் தடை விதிக்கக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சேமா, ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர், பொன். மாணிக்கவேல் மீதான வழக்குவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
சர்ச்சைகளுக்குப் பேர் போன பொன்.மாணிக்கவேல், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர்என்பதால், அந்த செல்வாக்கின் அடிப்படையில் அடாவடியாக செயல்படுவதாக புகார்கள் உள்ளதுநினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications