ஜெயலலிதா திருந்தவில்லை: வைகோ
ஈரோடு:
ஜெயலலிதா திருந்தி விட்டதாக நினைத்துவிடாதீர்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுகவின் தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. ஈரோடு மாவட்டத்தின் சார்பில் ரூ. 51 லட்சம் வைகோவின் வழங்கப்பட்டது. அதில் வைகோ பேசியதாவது:ஈரோடும், காஞ்சியும் திராவிட இயக்கத்தின் இரு விழிகள். எந்தவிதமான தன்னலமும் இல்லாமல் மக்கள் இந்த இயக்கம் வளர வேண்டும் என்று ரூ. 51 லட்சததை வாரி வழங்கியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஜனநாயக சீர்குலைவு ஆட்சி நடக்கிறது. மக்களை ஏமாளிகள் என்று கருதி ஏதேதோ அறிவிக்கிறார்கள். ஜெயலலிதா திருந்தி விட்டதாக நினைத்துவிடாதீர்கள். தேர்தல் பயத்தில் அவர் வெளியிடும் அறிவிப்புகள் தான் சமீபத்தில் அவர் அறிவித்த சலுகைகள் எல்லாம்.
சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகளை மதிக்காமல் அகம்பாவம், ஆணவத்தோடு பேசுகிறார் ஜெயலலிதா. தனது பொறுப்பை அவர் உணராமல் பேசுகிறார். சென்னை பல்கலைக்கழகம் என்ற பெயரை மதராஸ் பல்கலைக்கழகம் என்று அறிவிக்கிறார்.
எதிர்ப்பு கிளம்பியவுடன் 24 மணி நேரத்தில் அதை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் படுதோல்வி கிடைக்கும் என்ற பயத்தால் தான் அறிவித்ததை வாபஸ் பெற்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைப் போல வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக தலைமையில் போட்டியிட்டு கருணாநிதியின் ஆட்சியை அமைப்போம். அதிமுகவை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications