ஒகேனக்கல்: இடத்தை மீட்க போராட்டம்- முத்துலட்சுமி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
ஓகேனக்கல் பகுதியில் தமிழக-கர்நாடக எல்லையில் சர்ச்சைக்குரிய இடத்தை மீட்க 5,000 பேருடன் சென்று போராட்டம் நடத்தப்போவதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.
வீரப்பன் நடமாடிய இந்தக் காட்டுப் பகுதியில் இப்போது ஒரு தீவுத் திடல் பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் தமிழகத்துக்கும்கர்நாடகத்துக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இடத்தை ஆக்கிரமிக்க கர்நாடகம் முயல்வதாக தமிழகம் கூறியுள்ளது.இந் நிலையில் மேட்டூரில் நிருபர்களிடம் பேசிய முத்துலட்சுமி,
அந்தப் பகுதி தமிழகத்துக்கே சொந்தமானது. எனது கணவர் உயிரோடு இருந்தவரை அந்தப் பகுதியை கர்நாடகத்தினர் யாரும்சொந்தம் கொண்டாடவில்லை. இப்போது அவர் உயிரோடு இல்லாததால் பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
என் கணவர் உயிரோடு இல்லாவிட்டாலும் அவரது ஆசியுடன் தமிழகத்துக்கு உரிய இடத்தை மீட்க போராட்டம் நடத்துவேன்.தமிழக அரசும் மத்திய அரசும் விரைவாக செயல்பட்டு அந்த இடத்தை மீட்க வேண்டும்.
இல்லாவிட்டால் 5,000 பேருடன் சென்று போராட்டம் நடத்துவேன். இந்த பிரச்சனையில் உயிரை விடவும் நான் தயார் என்றார்முத்துலட்சுமி.












Click it and Unblock the Notifications