For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுமியிடம் பலாத்கார முயற்சி: கல்லூரி மாணவர் கைது

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

டியூசன் படிக்க வந்த 8ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவரின் வீட்டை பொது மக்கள் முற்றுகையிட்டுத் தாக்கினர்.

இகையடுத்து அந்த மாணவரையும் அவரது சகோதரியையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மாணவர் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

திருச்சி கீழ்புதூரைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரது மகள், கல்லூரியில் பயின்று கொண்டே வீட்டில் சிறுவர், சிறுமிகளுக்கு டியூசன் நடத்தி வருகிறார். இவரிடம் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாமவ, மாணவிகள் டியூசன் பயின்று வந்தனர்.

இந்த மாணவியின் அண்ணனான வெங்கடேசன் திருச்சியில் ஒரு கல்லூரியில் எம்.ஏ. பயின்று வருகிறார். இவரும் தங்கையோடு சேர்ந்த டியூசன் எடுப்பது வழக்கம்.

டியூசன் சொல்லித் தரும் சாக்கில், தனது தங்கை இல்லாத நேரங்களில், சிறுமிகளை தனியே அழைத்துச் சென்று இவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சமீபத்தில் வெறித்தனமாக ஒரு மாணவியின் மார்பைக் கடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவி தனது பெற்றோரிடம் கூற, அப் பகுதியினர் திரண்டு வந்து வெங்கடேசனின் வீட்டை முற்றுகையிட்டனர்.

வெங்கடேசனைப் பிடித்து உதைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வெங்கடேசனையும் அவரது தங்கையையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X