For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது: கலாம் வழங்கினார்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

எழுத்துலக பீஷ்மர் என்று போற்றப்படும் ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருதை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டெல்லியில்நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.

சர்ச்சைகளும் ஜெயகாந்தனும் உடன் பிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவரது புரட்சிகரமான எழுத்துக்கள்அனைவராலும் மதிக்கப்படுபவை.

இந்த ஆண்டுக்கான ஞான பீட விருது பெற அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவ்விருது வழங்கும் விழா டெல்லியில் நடந்தது.குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஜெயகாந்தனுக்கு விருதை வழங்கினார். ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை, சிலை ஆகியவைஅடங்கியது இந்த விருது.

விழாவில் பேசிய கலாம், ஜெயகாந்தனை வெகுவாகப் புகழ்ந்தார். சிறு வயதில் ஜெயகாந்தன் நூல்களை அதிகம் படித்துள்ளேன்.அவரது நாவல்கள் என்னை வெகுவாக கவர்ந்தவை என்றார்.

ஜெயகாந்தன் பேசுகையில், தமிழரான அப்துல் கலாம் கையால் இந்த விருதைப் பெறுவது தனக்கு பெருமை தருவதாககுறிப்பிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X