3 வயது சிறுமியை நாசப்படுத்திய 50 வயது மிருகம்
சென்னை:
சென்னை அடையாறு பகுதியில் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 50 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடையாறு கஸ்தூர்பா காந்தி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது நண்பர் வீடு அபிராமபுரத்தில் உள்ளது. அவருக்கு 3வயதில் மகள் உள்ளார். நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் கிருஷ்ணமூர்த்தி, சிறுமியிடம் காம வெறி கொண்டார். அடிக்கடிவீட்டுக்குச் சென்று சிறுமியிடம் பேசி வந்துள்ளார்.50 வயதுக்காரர்தானே என்று அதை விகல்பமாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர் கிருஷ்ணமூர்த்தியின் நண்பர்குடும்பத்தினர். இந் நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சிறுமியை தனது வீட்டுக்குக் கூட்டிச் சென்றுள்ளார் கிருஷ்ணமூர்த்தி. பின்னர்குழந்தையை நண்பர் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றார்.
வீட்டுக்கு வந்த சிறுமி அழத் தொடங்கியுள்ளாள். என்ன ஏது என்று புரியாமல் அவளிடம் விசாரித்தபோது, கிருஷ்ணமூர்த்திதன்னிடம் நடந்து கொண்ட கேவலமான செயலை தனக்குத் தெரிந்தவரையில் விவரித்துள்ளாள்.
அதிர்ந்து போன அவளது பெற்றோர் உடனடியாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
ஆனால் காவல் நிலையத்தில் இருந்த காக்கி தெய்வங்கள் அந்தப் புகாரை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து இணைஆணையர் உமா கணபதி சாஸ்திரியிடம் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
இணை ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் பேரில் அடையாறு மகளிர் காவல் நிலையம் ஆக்ஷனில் இறங்கியது.தற்போது கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications