இமாம் அலி நினைவு நாள்: பலத்த பாதுகாப்பில் மதுரை!
மதுரை:
போலீஸ் எண்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-உம்மா தீவிரவாதி இமாம் அலியின் நினைவு தினத்தையொட்டிமதுரையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை சிறையில் இருந்து தப்ப இமாம் அலியின் கூட்டாளிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்ததால் சிறையின் உள்ளேயும்வெளியேயும் ஆயுதம் ஏந்திய போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய இமாம் அலியும் அவரது கூட்டாளிகளும் 3 ஆண்டுகளுக்கு முன்செப்டம்பர் 29ம் தேதி பெங்களூரில் வைத்து தனிப் படை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களதுஉடல்கள்மதுரை நெல்பேட்டை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இமாம் அலியும் கூட்டாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தன்று அவர்களதுஆதரவாளர்கள் வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து வருகின்றனர்.
இவர்களது 3வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து அசம்பாவிதச் சம்பவங்கள்நிகழக் கூடும் என்று போலீஸார் எதிர்பார்ப்பதால், மதுரை முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
100க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸார் துப்பாக்கிகள், கலவரத் தடுப்பு வாகனங்களுடன்குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை மத்திய சிறைச் சாலைக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை தவிர தென் மாவட்டங்களில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications