சேலம் மாநகராட்சியில் குஷ்புவை கண்டித்து தீர்மானம்
சேலம்:
சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நடிகை குஷ்புவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குஷ்புவுக்கு எதிராக பல்வேறு தமிழர் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.
இந் நிலையில் சேலம் மாநகராட்சியில் குஷ்புவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சிக் கூட்டம்தொடங்கியதும், பெண் குலத்தையே இழிவுபடுத்திப் பேசிய குஷ்புவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுகஉறுப்பினர் கலையமுதன் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு மேயர் சுரேஷ்குமார் (அதிமுகவைச் சேர்ந்தவர்) அனுமதி தரவில்லை. மாநகராட்சிப் பணிகள் நிறைய உள்ளன, இதனால்இப்போது இந்த தேவையில்லாத தீர்மானம் கண்டிப்பாக தேவையா என்று அவர் கேட்டார்.
மேயரின் பேச்சுக்கு பெண் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது கவுன்சிலர் சாந்தி என்பவர் குஷ்புவைக் கண்டிக்கும் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பெண் கவுன்சிலர்கள் மிகஆவேசமாக இருந்ததால் மேயர் அமைதியாகிவிட்டார்.
இதையடுத்து குஷ்புவை கண்டிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் மன்றம் ஒன்றில் குஷ்புவுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள முதல் கண்டனம் இதுவாகும்.
குஷ்பு மீது மேலும் ஒரு வழக்கு:
இதற்கிடையே சென்னை, திருச்சி, திருவண்ணாமலை நீதிமன்றங்களைத் தொடர்ந்து தாராபுரம் நீதிமன்றத்திலும் குஷ்புவுக்குஎதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்ப்பட்டனத்தைச் சேர்ந்த சுமதி என்ற பூ வியாபாரம் செய்யும் பெண் குஷ்புமீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த மனு ஏற்கப்பட்டு, விசாரணை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்த சுமதிவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.