நெடுமாறனின் மகன் ஸ்டுடியோவில் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் மகன் நடத்தி வரும் புகைப்பட ஸ்டுடியோவின் கதவை உடைத்து விலைஉயர்ந்த பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

நெடுமாறனின் மகன் அமுதன், சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் புகைப்பட ஸ்டுடியோ நடத்தி வருகிறார். 2நாட்களுக்கு முன்பு இரவு, வழக்கம் போல ஸ்டுடியோவை மூடி விட்டு அவர் வீட்டுக்குச் சென்றார்.

மறு நாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த விலை உயர்ந்த கேமரா உள்ளிட்ட பலபொருட்கள் திருடு போயிருந்தன.

இதுகுறித்து கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் அமுதன் புகார் கொடுத்துள்ளார்.

அண்ணாச்சி வீட்டிலும் திருட்டு:

அதே போல சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் வீட்டில் சிலர் புகுந்து அங்கிருந்த செல்போன்கள்உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றனர்.

ராஜகோபாலின் வீடு சென்னை அசோக் நகர் செளந்தரபாண்டி தெருவில் உள்ளது. இங்கு புதன்கிழமை இரவு சிலர் வந்து, ஏசிஇயந்திரத்தைக் கழற்றிவிட்டு, அதன் மூலம் வீட்டுக்குள் புகுந்தனர்.

பின்னர் வீட்டில் இருந்த செல்போன்கள், கைக் கடிகாரங்கள் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றனர். காலையில் வீட்டில் திருடுபோனதை அறிந்த ராஜகோபால் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+