குஷ்பு: நடிகர் சங்கத்துக்கு பாமக விடுக்கும் நியாயமான கேள்விகள்
சென்னை:
பொது நிகழ்ச்சியில் தாய்க்குலத்தின் பிரதிநிதிகள் முன்னிலையில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் வரை குஷ்புவுக்கு எதிரானபோராட்டத்தை கைவிட மாட்டோம், இன்னும் தீவிரமாக்குவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாமக மகளிர் சங்கத் தலைவர் சக்தி கமலாம்பாள், செயலாளர் காசாம்பு பூமாலை ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்குஷ்புவையும், நடிகர் சங்கத்தையும் கடுமையாக கண்டித்துள்ளனர்.அவர்களது அறிக்கை:
தங்களது உயிரினும் மேலாக தங்களது கற்பை கருதுபவர்கள் தமிழக பெண்கள். இதுதான் தமிழகத்தின் தனி கலாச்சாரம். இதைக்கொச்சைப்படுத்திய குஷ்பு மும்பையிலிருந்து இறக்குமதியானவர்.
ஆனால் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நடிகர்களும், நடிகைகளும் பெரும்பாலும் தமிழர்கள். அதன் முக்கியநிர்வாகிகளும் தமிழர்கள்தான்.
எனவே தமிழகத்தின் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தி தமிழக பெண்களின் கற்பு நெறிக்கு களங்கம் கற்பித்த இறக்குமதி நடிகைகுஷ்புவை நடிகர் சங்கத்தினர் கண்டிப்பார்கள் என்று தமிழகத்தின் பெண்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த நடிகைசொன்னது அவரது சொந்தக் கருத்து என்று கூறி நடிகர் சங்கத்தினர் பொறுப்பை தட்டிக் கழித்திருக்கிறார்கள்.
அத்துடன் நடிகைக்கு எதிராக கொதித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களையும் பழித்திருக்கிறார்கள். நடிகர் சங்கத்தின்இந்தச் செயல் தமிழகத்தின் ஒட்டுமொத்த பெண்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன் இயக்குனர், நடிகர் தங்கர்பச்சான் சில கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியது தனிப்பட்ட கருத்துஎன்று அப்போது ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை?.
தான் தெரிவித்த கருத்துக்காக பத்திரிக்கைகளின் வாயிலாக, தொலைக்காட்சிகளின் வாயிலாக அவர் வருத்தம் தெரிவித்ததற்குப்பின்னரும், அவரை நடிகர் சங்கத்திற்கு வரவழைத்து எல்லோருக்கும் முன்பாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றுகட்டாயப்படுத்திய நடிகர் சங்கத்தினர் இப்போது இந்த நடிகை விஷயத்தில் அத்தகைய நிலையை ஏன் மேற்கொள்ளவில்லை?
ஏன் அத்தகைய துணிச்சல் அவர்களுக்கு வரவில்லை?
இன்று வாய்மூடிக் கிடக்கும் நடிகர் சங்கத்தினருக்கு பழம் பெரும் நடிகர்களை சுட்டிக் காட்ட எந்தத் தகுதியும் இல்லை.
இன்று ஒரு கலைவாணர் இல்லை, இன்று ஒரு எம்.ஜி.ஆர். இல்லை, இன்று ஒரு சிவாஜி இல்லை என்பதால்தான் , அந்ததைரியத்தில்தான் மும்பை நடிகை தமிழகத்தில் எத்தனை பெண்கள் கற்பு நெறியுடன் இருக்கிறார்கள் என்று வாய்க் கொழுப்புடன்கேட்கிறார் என்ற ஏக்கம் தமிழகத்தின் ஒட்டுமொத்த பெண்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
நடிகை குஷ்பு சொன்னதற்கு நடிகர் சங்கம் பொறுப்பேற்காது என்று சொல்லுகிறவர்கள், தங்கர்பச்சான் சொன்னதற்கு மட்டும்எப்படி பொறுப்பேற்றுக் கொண்டு நடவடிக்கை மேற்கொண்டார்கள்?
தமிழர் என்றால் ஒரு நிலை, மும்பை இறக்குமதி நடிகை என்றால் ஒரு நிலையா? இந்த இரட்டை வேடத்தை தமிழக பெண்கள்ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஒரு பொது நிகழ்ச்சியில், தாய்க்குலத்தின் பிரதிநிதிகளிடம் குஷ்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்தஅறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.