சட்டவிரோதமாக சவூதி சென்ற 100 இளைஞர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஹஜ் யாத்திரை செல்வதாக கூறி சட்டவிரேதமாக சவூதி அரேபியாவுக்குச் சென்று வேலை பார்த்த 100 இந்திய இளைஞர்கள்திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் விமானம் மூலம் இன்று சென்னைக்குத் திரும்பினர்.
ஹஜ் யாத்திரை செல்வதாக கூறி வட இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சவூதி அரேபியா சென்றனர்.இவர்களை பல்வேறு ஏஜென்டுகள் போலியான காரணத்தைக் கூறி அனுப்பி வைத்தனர்.சவுதி சென்ற இவர்கள், பின்னர் அங்குள்ள நிறுவனங்களில் அவர்கள் வேலைக்கு சேர்ந்தனர்.
அவர்களை சவூதி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறைத் தண்டனை முடிவடைந்த நிலையில் அவர்கள்அனைவரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுப்பப்பட்ட 100 இளைஞர்கள் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து அவர்களது சொந்தஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.












Click it and Unblock the Notifications