கடலில் ஆஞ்சநேயர் சிலை: தமிழக அரசு திட்டம்!
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கடலில் ஆஞ்சநேயர் சிலையை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.ராநநிாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமான திட்டங்களைஅமல்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் செல்லமுத்து கூறுகையில், 2004ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 29.8 லட்சம்சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இதை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திருப்புல்லாணி அருகே கடலில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலையை வைப்பது ஒரு திட்டம். இதன் மூலம் ஏராளமானசுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications