மதுரையில் கார்-பட்டாசு லாரி மோதல்: 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே வாடிப்பட்டியில் குவாலிஸ் காரும், பட்டாசுகளை ஏற்றி வந்த லாரியும் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் காரில்பயணம் செய்த 5 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கணேசன் தனது குடும்பத்துடன் மதுரை வந்து கொண்டிருந்தார். வாடிப்பட்டி அருகே கார் வந்தபோது,எதிரே சிவகாசியிலிருந்து ராஜஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த பட்டாசுகள் ஏற்றிய லாரியுடன் கார் மோதியது.
இதில் கார் டிரைவர், 3 பெண்கள், ஒரு குழந்தை ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். கணேசன் உள்ளிட்ட 4 பேர்படுகாயமடைந்தனர்.
அனைவரும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பேருடைய நிலைகவலைக்கிடமாக உள்ளது.












Click it and Unblock the Notifications