For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஷ்புவை விடாது விரட்டும் வழக்குகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நடிகை குஷ்புவைத் தண்டிக்கக் கோரி புதுக்கோட்டை மற்றும் வானூர் குற்றவியல் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

Kushbooதமிழ்ப் பெண்களின் கற்பு குறித்துப் பேசிய குஷ்புவைத் தண்டிக்கக் கோரி ஏற்கனவே சென்னை எழும்பூர், திருச்சி, திருவண்ணாமலை,தாராபுரம் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந் நிலையில் மேலும் 2 நீதிமன்றங்களிலும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கைவிசாரணைக்கு ஏற்ற நீதிபதி தமிழரசி, அக்டோபர் 6ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

அதேபோல வானூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பாமக மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் முருக்கம் முனுசாமி என்பவர் மனுஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், தமிழ்ப் பண்பாட்டை கேவலப்படுத்தும் வகையில் பேசியுள்ள நடிகை குஷ்புவை தண்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

தாராபுரம் நகராட்சி கண்டன தீர்மானம்:

இதற்கிடையே ஈரோடு மாவட்டம் தாராபுரம் நகராட்சி மன்றக் கூட்டத்தில் குஷ்புவுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம்நிறைவேற்றப்பட்வுள்ளது.

முன்னதாக சேலம் மாநகராட்சியில் குஷ்புவுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து தாராபுரம் நகராட்சிக் கூட்டம் தலைவர் சாந்தி (பாஜக) தலைமையில் நடந்தது. அப்போது பெண் கவுன்சிலர்கள் சிலர்எழுந்து தமிழக பெண்களை குஷ்பு மிகவும் கேவலமாக பேசியுள்ளார். பெண்களின் மனதை இது கடுமையாக பாதித்துள்ளது.

குஷ்புவின் இந்த அநாகரீகப் பேச்சைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரினர். இதையடுத்துப் பேசிய தலைவர்சாந்தி, அடுத்த கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X