சிபிஐ ரெய்ட்: 4 மத்திய அரசு அதிகாரிகள் கைது- சென்னை அதிகாரிகள் மீது வழக்கு
டெல்லி:
நாடு முழுவதும் நேற்று 198 இடங்களில் ரெய்ட் நடத்திய சிபிஐ அதிகாரிகள், வருமானத்தை மீறி சொத்துக் குவித்த 4 மத்திய அரசு மூத்தஅதிகாரிகளைக் கைது செய்துள்ளனர்.
மத்திய மனித வளத்துறையின் உருது மேம்பாட்டுத்துறைக்கான தேசிய கவுன்சிலின் இயக்குனர் ஹமீதுல்லா பட், தனது வருமானத்தையும்மீறி ரூ. 2 கோடிக்கு சொத்து குவித்திருப்பது உறுதியானதையடுத்து கைது செய்யப்பட்டார்.அதே போல டெல்லி மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரியான நரேஷ் சங்கர் தனது வருமானத்தை மீறி ரூ. 1 கேடிைக்கு சொத்துகுவித்துள்ளார். இவரது வீட்டில் ரூ. 2.9 லட்சம் பணம் பிடிபட்டது. இதையடுத்து இவரும் கைது செய்யப்பட்டார்.
மத்திய நலத்துறை அமைச்சகத்தின் மருந்துத்துறை கட்டுப்பாட்டு அதிகாரியா ஜானக் ராஜ் என்பவரும் ரூ. 1 கோடிக்கு சொத்து குவித்ததுஉறுதியானதால் கைது செய்யப்பட்டார்.
மேலும் மும்பை வருமான வரித்துறையின் மூத்த அதிகாரியான மீனாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தென்னக ரயில்வே துணைத் தலைமைப் பொறியாளர் மற்றும், சென்னை மத்திய கலால் துறையின் (சென்ட்ரல் எக்ஸைஸ்) உதவிக்கமிஷ்னர் ராமசாமி ஆகியோர் மீது வருமானத்தை மீறி சொத்து குவித்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இவர்களது வங்கி லாக்கர்கள் சோதனையிடப்படவுள்ளன. இதன் பின்னரே இவர்களைக் கைது செய்வது குறித்து சிபிஐ முடிவு செய்யும்.இதில் ராமசாமியின் வீட்டில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களுக்கான ஆவணங்கள் பிடிபட்டன.












Click it and Unblock the Notifications