கோவை, மதுரை, திருச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவன கிளைகள்: மாறன் முயற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோவை மற்றும் மதுரை, திருச்சி ஆகிய நகர்களிலும் சாப்ட்வேர் அலுவலகங்களைத் திறக்குமாறு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம்கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

சென்னையில் இந்திய தொழில் வர்த்தக சபையின் கூட்டத்தில் பேசிய மாறன்,

ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தயாரிப்பு ஆலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதன் முதல் கட்டப் பணிகள்அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் முடிவடைந்துவிடும்.

நோக்கியாவைத் தொடர்ந்து பிளக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் தனது எலெக்ட்ரானிக் கருவிகள் தயாரிப்பு ஆலையை ஸ்ரீபெரும்புதூரில்அமைக்கவுள்ளது.

என்னால் முடிந்தவரை தமிழகத்துக்கு தொழில்நுட்பத்துறை நிறுவன ஆலைகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். இந்த விஷயத்தில்தமிழக அரசும் போதிய ஒத்துழைப்பு தர வேண்டும்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொழிநுட்பத்துறை நிறுவனங்கள் பெருகி வருவதால் அப் பகுதியின் சாலைகளை மாநில அரசு விரைந்துமேம்படுத்த வேண்டும். அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை பணிகளை எவ்வளவு வேகத்தில் முடியுமோ அவ்வளவு வேகத்தில் தமிழகஅரசு செய்து தர வேண்டும்.

இல்லாவிட்டால் வெளிநாட்டு மூலதனத்தை இழுப்பது கடினமாகிவிடும். வரும் டிசம்பரில் இந்தியா வரும் மைக்ரோசாப்ட் அதிபர்பில்கேட்ஸ் சென்னைக்கு வர ஒப்புக் கொண்டுள்ளார்.

சென்னை தவிர கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகர்களிலும் கிளைகளைத் திறக்குமாறு அந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கோரிவருகிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+