For Daily Alerts
Just In
பெங்களூர் அருகே பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி
பெங்களூர்:
பெங்களூர் அருகே மாகடி என்ற இடத்தில் பஸ் மரத்தில் மோதி, கவிழ்ந்ததில் 25 பேர் வரை பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.பெங்களூரில் இருந்து தும்கூர் அருகே உள்ள ஹுலியூர்துர்கா என்ற இடத்துக்குச் சென்று கொண்டிருந்த அந்த தனியார் பேருந்தில்உள்ளேயும், கூரைக்கு மேலேயுமாக சுமார் 250 பேர் இருந்ததாகத் தெரிகிறது.
மாகடி அருகே சென்றபோது அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர வேகத்தில் மரத்தில் மோதி, பின்னர் கவிழ்ந்து.
இதில் பஸ்சில் இருந்த 250 பேர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் பலர் பஸ்சுக்கு அடியில் சிக்கிக் கொண்டுள்ளனர். அங்கு மீட்புப்பணி நடந்து வருகிறது.
இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
Comments
Story first published: Sunday, October 2, 2005, 5:30 [IST]