எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தின் அரசு வீட்டில் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மூத்த காங்கிரஸ் தலைவரும், சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவருமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தின் சென்னை வீட்டில்கொள்ளை நடந்துள்ளது.
சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் உள்ள டவர் பிளாக்கில் 5வது மாடியில் எஸ்.ஆர்.பிக்கு அரசு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.சட்டசபைக் கூட்டம் முடிவடைந்ததையடுத்து எஸ்.ஆர்.பியும் அவரது மனைவி பாலாமணியும் சொந்த ஊரான கோவைக்குப்புறப்பட்டுச் சென்றனர்.
இந் நிலையில் காலையில் அவர்களது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து போலீசாருக்கு காவலாளி புகார்கொடுத்தார். போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடந்தன. என்னென்னபொருட்கள் களவு போயின என்று தெரியவில்லை.
எஸ்.ஆர்.பி. திரும்பி வந்த பின்னரே கொள்ளை போன பொருட்கள் குறித்த விவரம் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications