ஆந்திரா: நகராட்சி தலைவர் தேர்தலில் தமிழ் பெண் வெற்றி
Subscribe to Oneindia Tamil
சித்தூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் நகராட்சியின் தலைவராக தமிழ்ப் பெண்ணான சரளா மேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 72 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பதவியை ஒரு தமிழ்ப் பெண் பிடித்துள்ளார்.
ஆந்திராவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து நகராட்சிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இதில் சித்தூர் நகராட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சரளா மேரி வென்றார்.
இதே போல சில கவுன்சிலர் பதவிகளையும் தமிழர்கள் பிடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications