இன்று சூரிய கிரகணம்: இந்தியாவிலும் தெரிந்தது
சென்னை:
இன்று பிற்பகல் 1.20 மணி முதல் மாலை 6.48 மணி வரை சூரிய கிரகணம் ஏற்பட்டது.
ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, பிரிட்டிஷ் தீவுகளில் இந்த கிரகணம் முழுமையாகத் தெரிந்தது.இந்திய நேரப்படி பகல் 1.20 மணிக்கு பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வந்தது. அப்போது சூரியனை சந்திரன் மறைக்கஆரம்பித்தது. அப்போது இதை இந்தியாவில் இருந்து பார்க்க முடியவில்லை. ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில்உள்ளவர்கள் இதனைக் காண முடிந்தது.
இந்தியாவில் மாலை 4.30 மணிக்கு சூரிய கிரகணம் தென்பட ஆரம்பித்தது. ஆனால் முழுமையான கிரகணம் தெரியவில்லை.
ஆனுலார் எக்லிப்ஸ் என்று அழைக்கப்படும் இந்த சூரிய கிரகணத்தின்போது சூரியனைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.கருப்பு கண்ணாடி அணிந்து கூட இதைப் பார்ப்பது கண்களை பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.
கிரகணத்தையொட்டி இன்று பகல் முதல் இரவு வரை திருப்பதி திருமலை ஆலயம் உள்பட கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டன.பாண்டிச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications