கொழும்பு-லண்டன் விமானத்தில் குண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
கொழிம்பில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்ததையடுத்து அந்தவிமானம் அவசரமாக கொழும்பிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது.அந்த ஏர்-பஸ் 240 விமானம் 258 பயணிகள், 15 விமான ஊழியர்களுடன் இன்று பகலில் லண்டன் புறப்பட்டது. புறப்பட்ட 40நிமிடத்தில் அந்த விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மிரட்டல் வந்தது.
இதைத் தொடர்ந்து அந்த விமானம் மீண்டும் கொழும்புவுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டது. அதிலிருந்த பயணிகள் அனைவரும்இறக்க்பபட்டு விமானத்தில் வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications