ம.பியில் ரயில் விபத்து- 16 பேர் பலி: பிரேக் செயல்படாததால் கோரம்
தாதியா (ம.பி):
மத்தியப் பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் இருந்து குதித்து, ஓடி சிக்னல் அறை மீது மோதியதில் ஏற்பட்ட பயங்கரவிபத்தில் 16 பேர் பலியாயினர். மேலும் 60 பேர் காயமடைந்தனர்.
வாரணாசியில் இருந்து குவாலியர் சென்று கொண்டிருந்த அந்த பன்டேல்கண்ட் எக்ஸ்பிரஸ் இன்று காலை தாதியா ரயில்நிலையத்தைக் கடந்தபோது பிரேக்குகள் செயல்படவில்லை என ரயில் நிலையத்துக்கு டிரைவர் தகவல் தந்தார்.இந் நிலையில் தண்டவாளத்தை விட்டு அந்த ரயில் குதித்தது. தடம் விலகிய என்ஜினும் 6 பெட்டிகளும் பயங்கர வேகத்தில்சிக்னல் அறை மீது மோதின.
இதில் 16 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் பலரது உடல்கள் நொறுங்கிய பெட்டிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடும், வீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும் தரப்படும் என ரயில்வேஅமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ரயில் நிலையத்தில் லூப் லைனின் சென்ற ரயில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் தான் சென்றிருக்க வேண்டும்.ஆனால், அது 90 கி.மீ. வேகத்தில் சென்றுள்ளது. இது டிரைவரின் தவறா அல்லது பிரேக் செயல்படாததால் இந்த வேகத்தில்டிரைவர் சென்றாரா என்பது விரிவான விசாரணையில் தான் தெரிய வரும்.
விபத்தில் ரயிலின் டிரைவரான ரம்ஸான் கான் என்பவரும் பலியாகிவிட்டார்.












Click it and Unblock the Notifications