எஸ்ஆர்பி வீட்டில் ரகசிய கேமராவா? இளங்கோவன் கிண்டல்
சென்னை:
ரகசிய கேமரா வைத்து கண்காணிக்கும் அளவுக்கு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தின் வீட்டில் என்று இருக்கிறது என்று மத்தியஅமைச்சர் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சிக்குள் இதுவரை வாசனுடன் மட்டுமே மோதி வந்த இளங்கோவன் இப்போது எஸ்.ஆர்.பியையும் பிடித்துக் கொண்டுள்ளார்.கொங்கு மண்டலத்தில் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்பதில் எஸ்.ஆர்.பி. மற்றும் இளங்கோவனுக்கு இடையே மோதல்மூண்டுள்ளது.மூத்தவரான எஸ்.ஆர்.பி. சட்டப் பேரவைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகி, இளையவர்களுக்கு வழி விட வேண்டும்என்று இளங்கோவன் கூறியுள்ளார். தனது பதவிக்கு வேட்டு வைக்கும் இந்த முயற்சியில் டெல்லியின் ஆசியும் இருக்குமோ என்றுசந்தேகிக்கும் எஸ்.ஆர்.பி. இதுவரை இளங்கோவனுக்கு பதில் ஏதும் தராமல் மெளனம் காத்து வருகிறார்.
இந் நிலையில் தான் எஸ்ஆர்பி வீட்டில் கொள்ளை நடந்தது. ஆளும் தரப்பின் ஆசியோடு, போலீஸ் துணையோடு நடந்திருக்கும்கொள்ளை இது என்று கருதும் எஸ்.ஆர்.பி. தனது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் செல்லவும், ரகசிய கேமராஅல்லது ஒட்டு கேட்பு கருவி வைப்பதற்காகவே பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
(போலீசாரால் தேடப்பட்டு வரும் கராத்தே தியாகராஜன் சில ஆவணங்களை எஸ்ஆர்பியிடம் தந்துவிட்டுத்தலைமறைவாகியுள்ளதாக ஆளும் தரப்பு கருதுகிறது. காங்கிரசில் இருந்தபோது எஸ்ஆர்பியின் வலது கரமாக இருந்தவர் தான்கராத்தே என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னணியிலேயே தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதாக எஸ்ஆர்பி கருதுகிறார்.)
இந் நிலையில் எஸ்ஆர்பியின் பரபரப்பான புகாரை கிண்டலடித்துள்ளார் இளங்கோவன்.
நிருபர்களை சந்தித்த இளங்கோவவனிடம், தமிழக காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பட்டியலில் உங்களது ஆதரவாளர்கள்ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டபோது,
அந்தப் பட்டியலைத் தயாரிக்க என்னிடம் ஒரு பட்டியலை மேலிடம் கேட்டது. நானும் கொடுத்துள்ளேன். அதிஸ் எல்லாதரப்பினரும் இடம் பெறுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது வீட்டில் திருடர்கள் நுழைந்தார்களா அல்லது காவலர்களே நுழைந்தார்களா என்பது சந்தேகமாகஉள்ளதாகவும், தனது வீட்டில் ரகசிய கேமரா வைத்து கண்காணிக்க முயற்சி நடப்பதாகவும் எஸ்ஆர்பி கூறியுள்ளார்.
அந்த அளவுக்கு அவரது வீட்டில் என்ன ஆதாரம் இருக்கிறதோ? என்ன ஆவணங்கள் இருக்கப் போகிறதோ தெரியவில்லை. இதுகுறித்து எஸ்ஆர்பியிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்றார் கலகலவென சிரித்தடியே.