சிறை தண்டனையை எதிர்த்து ஜெயலட்சுமி அப்பீல்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

தீர்ப்புக்குப் பின் ஜெயலட்சுமி

எஸ்.பியின் மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் 7 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலட்சுமி, இந்த தண்டனையை எதிர்த்து வரும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யவுள்ளார்.

திண்டுக்கல் ரிசர்வ் போலீஸ் எஸ்பி ராஜசேகரனுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு குடும்பம் நடத்திய ஜெயலட்சுமியால், ராஜசேகரனின் மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்டார்.

சிறைக்கு கொண்டு செல்லப்படும் ராஜசேகரன்

இந்த வழக்கில் எஸ்பிக்கும் ஜெயலட்சுமிக்கும் தலா 7 வருட சிறை தண்டனை வழங்கி திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி வரும் 10ம் தேதி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப் போவதாக ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் ஓம் சேகர்பாபு கூறியுள்ளார்.

ஜெயலட்சுமி-ராஜசேகரன் ஒரு காலத்தில்...

இதற்கிடையே தண்டனையை எதிர்த்து ராஜசேகரனின் சார்பிலும் திண்டுக்கல் நீதிமன்றத்திலேயே மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+