ஜெ. தலையீடு: உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் புகார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சங்கரராமன் கொலை வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடிக் குறுக்கீடு இருப்பதால் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்குமாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஜெயேந்திரரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவரதுதரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாரிமன்,
சங்கர்ராமன் கொலை வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட குறுக்கீடு உள்ளது. இதனால் இந்த வழக்கை தமிழகத்தில்விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே இந்தக் கொலை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றார்.
நாளையும் இந்த மனு மீது தொடர்ந்து விசாரணை நடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications