திடீர் மந்திரி தயாநிதி மாறன்: பொன்னையன் தாக்கு
சென்னை:
இது தொடர்பாக பொன்னையன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தமிழக அரசின் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பதை அறியாமலேயேஉண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகிறார்.11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு குறிப்பாக தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்வழங்கும் திட்டம் மத்திய அரசின் உதவியோடு தான் செயல்படுத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.
அவர் சொல்வது உண்மையானால் மற்ற மாநிலங்களில் இந்தத் திட்டம் இல்லாதது ஏன்?. மாநில அரசுத் திட்டங்கள் எப்படிநிறைவேறுகின்றன என்ற அடிப்படை கூட தெரியாத மாறன் திடீர் மந்திரியாகிவிட்டார்.
மாநில அரசின் செயல்பாட்டைக் குலைக்கும் வகையில் தான் மத்திய அமைச்சர்கள் செயல்படுகிறார்கள். சுய உதவிக் குழுக்களுக்குமத்திய அரசு தான் நிதி உதவி வழங்குவதாக அவர்களது மூத்த தலைவர் கூறியிருக்கிறார்.
அதுபோலத் தான் புரட்சித் தலைவி, அம்மா கொண்டு வந்த இலவச சைக்கிள் திட்டத்தை மத்திய அரசின் திட்டம் என்கிறார். இதுஎங்கள் தங்கத் தலைவி கொண்டு வந்த புரட்சிகரத் திட்டம்.
மாணவர்கள் சந்தோஷமாக எதிர்காலம் நோக்கி சைக்கிளில் செல்வது தயாநிதிக்கு பிடிக்கவில்லை. பொறாமையால் பொய்யானதகவல்களை வெளியிடுகிறார். அவருக்குத் தெரியாத சம்பந்தமில்லாத விஷயங்களில் அவர் தலையிடாமல் இருப்பதேஅவருக்கு நல்லது.
அம்மாவின் புரட்சிகரமான திட்டத்துக்கு கிடைத்து வரும் புகழை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள தயாநிதி மாறனுக்கு ஆசை.
இவ்வாறு பொன்னையன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications