மதுரை: போக்குவரத்துக் கழக தாற்காலிக டிரைவர்கள் 200 பேர் திடீர் நீக்கம்
மதுரை:
மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வந்த தாற்காலிக டிரைவர்கள் 200 பேர் திடீர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 549 டவுன் பஸ்கள் இயங்குகின்றன. இவற்றில் சில பஸ்களுக்கு போதுமானடிரைவர்கள் இல்லை. இதனால் தினசரி கூலி அடிப்படையில் 200க்கும் மேற்பட்ட டிரைவர்கள் நியமிக்கப்ட்டனர்.இந்த நிலையில் போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது.
அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு பசுமலையில் உள்ள அரசு போக்குவரதத்து கழகபணிமனையில் நடந்த நேர்முகத் தேர்வில் 600 பேர் வரை கலந்து கொண்டார்கள். இதில் சிலர் அமைச்சர்களின் சிபாரிசு பெற்றுபணியில் சேர்வதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
அதனால் புதிதாக தேர்ந்தெடுக்கபட்டவர்கள் வேலையில் சேர வசதியாக, இதுவரை தற்காலிகமாகப் பணியாற்றி வந்த 200 க்கும்மேற்பட்ட ஊழியரை வேலை நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். தற்போது புதிய ஊழியர்கள் இன்னும் பணியில் சேராததால்டிரைவர்கள் பற்றாக்குறையால் பல பஸ்கள் இயங்கவில்லை.
ஏற்கனவே 240 நாட்களுக்கு மேல் பணி புரிந்தவர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை. வாரிசு அடிப்படையில் பணியில்சேர்ந்தவர்களும் இதில் அடங்குவர்.
இதனால் புதிய ஊழியர்கள் நியமனம் சர்ச்சையை எழுப்பி இருக்கிறது.












Click it and Unblock the Notifications