For Daily Alerts
Just In
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா
சென்னை:
தமிழக அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞரான கே.துரைசாமி தனது பதவியை தீடீர் என்று ராஜினாமாசெய்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞராக கடந்த ஆகஸ்டு மாதம் பதவியேற்றார் துரைசாமி.இவர் சங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு, காஞ்சிமடதுக்கு எதிரான பிறவழக்குகளில் அரசின் சார்பில் ஆஜராகி வந்தார்.
இந் நிலையில் வேலை பளுவைத் தாங்க முடியாததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அரசுக்குஅனுப்பியுள்ள கடிதத்தில் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஆனால் இதன் பின்னணியில் வேறு விவகாரம் இருப்பதாகத் தெரிகிறது.
Comments
Story first published: Wednesday, October 5, 2005, 5:30 [IST]