பொன்னையனின் அநாகரீகம்: தயாநிதி தாக்கு
சென்னை:
இலவச சைக்கிள் திட்டத்துக்காக மத்திய அரசிடம் ரூ. 20 கோடி பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீண்டும்கூறியுள்ளார்.
தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தரப்படும் இலவச சைக்கிள் திட்டத்துக்கு மத்திய அரசுதான் நிதியுதவி செய்கிறது என மாறன் கூறியிருந்தார்.இதை மறுத்து மந்திரி பொன்னையன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில்,
தமிழக அரசின் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்ற அடிப்படை கூட அறியாத மாறன் எல்லாம் திடீர் மந்திரிஆகிவிட்டார். இது எங்கள் தங்கத் தலைவி கொண்டு வந்த புரட்சிகரத் திட்டம்.
சம்பந்தமில்லாத விஷயங்களில் மாறன் தலையிடாமல் இருப்பதே அவருக்கு நல்லது என்று கூறப்பட்டிருந்தது. மேலும் திமுகதலைவர் கருணாநிதியையும் தாக்கியிருந்தது அந்த அறிக்கை.
இதற்கு பதில் கூறி மாறன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
நான் கூறிய கருத்துக்கு அமைச்சர் பதிலளிப்பதற்குப் பதிலாக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியிருக்கிறார்.எனக்கு பதில் சொல்லாமல், தேவையில்லாமல் கருணாநிதியை ஏசியிருக்கிறார். அவரது வயதையும் கூறி விமர்சித்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ரூ. 20 கோடியைதமிழக்குக்கு வழங்கியுள்ளது. இதில் ரூ. 6 கோடி மானியம். ரூ. 14 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவியைக் கேட்டு தமிழக அரசின் ஆதி திராவிட நலத்துறை ஆணையர் மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதம்,ஆதாரமாக உள்ளது. 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நிதி மத்திய அரசால் தமிழகத்துக்கு தரப்பட்டது.
இதிலே நான் என்ன தவறுதலாகப் பேசிவிட்டேன் என்று பொன்னையன் சாடுகிறார்?. மாநில சுயாட்சியையே நான்கேள்விக்குறியாக்கிவிட்டதாக பொன்னையன் புலம்ப இதில் என்ன இருக்கிறது?. மத்திய அரசும் இலவச சைக்கிள் திட்டத்துக்குஉதவியது என்ற உண்மையைக் கூறினால் ஏன் அமைச்சர் கதறுகிறார்?
என்னைப் பற்றிய அமைச்சரின் அர்ச்சனையே, அவரது அநாகரீகப் பண்பாடுகளில் ஒன்றாகவே கருத வேண்டியிருக்கிறது என்றுகூறியுள்ளார் தயாநிதி.